ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம்

 ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம்'', என்று சென்னையில் நடந்த போராட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ஆவின்பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரியும், ஆவின் நிறுவனத்தை கண்டித்தும் பாஜக. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த ஒருவருட பாஜக. ஆட்சியில் பொருளாதார ரீதியில் இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால் தமிழகம் பின்னோக்கி சென்று வருகிறது. ஆவின் நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தினமும் 23 லட்சம் லிட்டர் பாலிலும் ஊழல்நடக்கிறது. 'தட்டிகள்' வைத்து அரசாங்க அதிகாரிகளை தட்டிக்கேட்கும் அளவுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்தகாரர்கள் வந்துவிட்டனர். அதிமுக. அரசில் நடந்து வரும் ஒவ்வொரு ஊழலும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

தமிழக அரசின் நடவடிக்கைகளில் நிகழும் ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு தவறான செயல் பாட்டிற்கும் எதிராக பாஜக. போராட்டத்தில் ஈடுபடும். அதிமுக., தி.மு.க.வுக்கு எதிராக ஒரு மாற்று சக்தியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. ஊழல் ஒழிப்பு ஒன்றே எங்களின் லட்சியம். எனவே தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம். போராட்டம் நடத்துவோம்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எச்.ராஜா கூறுகையில், ''விலையில்லா கால்நடைகளை கொடுத்து விட்டு, பால் வியாபாரத்தையும் ஊக்குவித்து இப்போது 15 சதவீத பாலைவாங்க மறுக்கும் அரசின் செயல்பாடு நியாயமற்றது. உற்பத்தி செய்த பாலை அடுத்த 4 மணி நேரத்தில் காய்ச்சி பதனிடவேண்டும். அப்படி இல்லை என்றால், பால் கெட்டுவிடும். எனவே தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'', என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...