மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்துச்செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது

 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்துச்செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது என சுப்பிரமணியன் சாமி மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தம்பி மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள் நிதியின் திருமண அழைப்பிதழை, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களை நேரில்சந்தித்து மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகின்றார்.

பாஜக தலைவர் சுப்பிர மணியன் சாமியை அவரது சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அவரது தம்பி முக.தமிழரசுவின் மகன் நடிகர் அருள் நிதியின் மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அதனை சுப்பிர மணியன் சாமி பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சாமி கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். அவ்வாறு அவர்கள் மேல் முறையீடு செய்ய தவறினால், நான் அதனைச்செய்வேன்.

என்னைப் பற்றி, பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா புகார்கடிதம் எழுதியுள்ளார். நான் ஒன்றும் பள்ளி மாணவர் அல்ல. நரேந்திரமோடி பிரின்சிபல் இல்லை , மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது என பாராட்டினார்.

மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி, மதுரை மாவட்ட விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான சுப்பிரமணியசாமி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:

இந்திய நாட்டின் வரலாறு அதிகம் மறைக்கப்பட்டு, உண்மை வரலாறு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. முன்பு ஆங்கிலேயர் தயாரித்த பாடத்திட்டம் தான் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதனை மாற்றி இந்தியாவின் முழுமையான வரலாறுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால் அவரது நிலை குறித்து மர்மமாக உள்ளது. அவர் குறித்து மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிடக்கோரி 1991–ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் எந்த அரசும் வெளியிட முன் வரவில்லை.

தற்போது மத்தியில் பாரதிய ஜனதா அரசு உள்ளது. இந்த அரசு நேதாஜி குறித்து மறைக்கப்பட்ட ஆவணங்களை ஆகஸ்ட் 15–ந் தேதிக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு மீது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன்.

ஆவணங்களை வெளியிட்டால், காங்கிரஸ்காரர்கள் வீதியில் நடமாட முடியாது என மோடிநினைக்கலாம். அதனை பொருட்படுத்தாமல் ஆகஸ்ட் 15–ந் தேதிக்குள் மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்து முடிவாகி விட்டது. அதனை ஆகஸ்ட் 31–ந் தேதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ராமநாதபுரத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவது குறித்தும் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...