பிரதமர் 7-ந்தேதி காஷ்மீர் பயணம்

 பிரதமர் நரேந்திரமோடி, ஒரு நாள் பயணமாக, வருகிற 7-ந்தேதி காஷ்மீர் செல்கிறார். ஜம்மு பிராந்தியம் ரம்பன் மாவட்டம் சந்தர் கோட் பகுதியில், பக்லிகர் மின் திட்டம், உத்தம்பூர்-பானிஹல் இடையிலான நான்கு வழிசாலை திட்டம் ஆகியவற்றை அவர் தொடங்கி வைக்கிறார்.

தலைநகர் ஸ்ரீநகரில் ஷெர்-இகாஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

பிரதமரின் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக, அதேநாளில், ஸ்ரீநகரில் 10 லட்சம்பேர் பங்கேற்கும் பேரணிக்கு பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுகட்சி தலைவர் சையது அலிஷா ஜிலானி அழைப்பு விடுத்துள்ளார். அவர் ஏற்கனவே வீட்டுக் காவலில் உள்ளார்.

இதையடுத்து, பிரதமரின் பொதுக்கூட்டம் அமைதியாக நடைபெற ஏதுவாக, கலகக்கார தலைவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லை பாதுகாப்புபடையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிரதமர்வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜம்முவில் மாநில போலீஸ் டிஜிபி. கே.ராஜேந்திர குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் வாகன அணி வகுப்பு செல்லும் பாதை, போக்குவரத்து மாற்றம், குடிநீர், வாகன நிறுத்தம், முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப் பட்டது.

பாதுகாப்பு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு நிலவவேண்டும் என்றும், சமூக விரோத சக்திகளை கண்காணிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டி.ஜி.பி. வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...