தேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்பட கூடாது

தேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்படகூடாது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் திருப்தி படுத்தப் படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைபாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றிவந்த அப்துல் ரஷீத்தும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கைபதுல்லா கான் என்பவரும் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இருவர் மீதும் தேசதுரோக பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மேற்கு கொல்கத்தா நகரில் ஐஎஸ்ஐ. உளவு அமைப்புக்காக வேவுபார்த்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் கைதான கைபதுல்லா கான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவுபார்த்ததாக கைதான கைபதுல்லா கானுக்கும் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகஊழியர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்காரிடம் கேள்வி எழுப்பட்டது. ”ஓட்டு வங்கி அரசியலை பொருட்டு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை சாந்தப் படுத்தப்படுகிற நிலையானது காணப்படுகிறது. இது நல்லதுகிடையாது. தேசத்தின் பாதுகாப்பு மீது கேள்வி எழும் நிலையில், அரசியலுக்கு எந்த ஒரு நோக்கமும் கிடையாது,”

உலகளவில் தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் கூட்டாக போரிட்டுவருகிறோம்;  இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுகிறது. நம்முடைய ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடங்கிய மூன்று மறைமுக போரிலும் தோற்கடிக்கப் பட்டது. என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.