நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையை காங்கிரஸ்கட்சி வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைதலைவர் ராகுல் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் தூண்டுதல்தான் காரணம் என்றுகூறி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டுவருகிறது. இதனால் அவை ஒத்திவைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜாக்ரன் செய்திநிறுவனம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று பேசினார். அப்போது அவர்  கூறியதாவது:

ஒருவருடைய மனம்போன போக்கில், ஜனநாயகம் செயல்படமுடியாது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் மீண்டும் அமளியில் ஈடுபடுகின்றனர். இது கவலையளிக்கிறது. தேர்தல் மற்றும் அரசுடன் மட்டும் ஜனநாயகத்தை வரையறுத்துக் கொள்ளகூடாது. ஜனநாயகத்துக்கு முன்னர் 2 முக்கிய அபாயங்கள் உள்ளன. ஒன்று மன்தந்த்ரா (ஒருவருடைய மனம்போன போக்கில் செயல்படுவது), இன்னொன்று தன்தந்த்ரா (பண பலம்). இதன் படி ஜனநாயகம் செயல்பட முடியாது.

என் மனதில் தோன்றியபடி நான் செயல்படமுடியும். ஆனால், நாடு அப்படி செயல்பட முடியுமா? ஏழைகள் தங்கள் உரிமைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். சரக்கு மற்றும் சேவைவரி மசோதா (ஜிஎஸ்டி) மட்டுமல்ல, ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் முடங்கி கிடக்கின்றன.

ஜிஎஸ்டி.க்கு என்ன வேண்டு மானாலும் ஆகட்டும். அதை எல்லாருடனும் கலந்தாலோசித்து இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கலாம். ஆனால், ஏழைமக்களின் கதி என்ன? நாடாளுமன்றம் செயல்பட முடியாததால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன. குறிப்பாக வேலைசெய்யும் ஏழைகளுக்கு போனஸ் தொகை ரூ.3,500-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தும் சட்டமசோதா தேங்கி கிடக்கிறது.

எனவேதான் நாடாளுமன்றத்தை செயல்படவிடுங்கள் என்று கேட்கிறேன். விவாதம் நடத்தவும், பேச்சு வார்த்தை நடத்தவும், தகவல் பரிமாறவும் நாடாளுமன்றத்தை விட வேறுசிறந்த இடம் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தை இல்லாத நிலையாக்கினால், பின்னர் ஜன நாயகம் என்பது கேள்விக் குறிதான். ஜனநாயகத்தின் கவுரத்தை மனதில்கொண்டு, சாதாரண ஏழைமக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...