தேமுதிக.,வின் முடிவு ஒருவகையில் ஆறுதலை தருகிறது

சென்னை ராயப் பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தேமுதிக தனித்து தேர்தலைசந்திக்கும் என்றார். 
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேமுதிக தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இது ஒருவகையில் ஆறுதலையும், வரவேற்பையும் பெறுகிறது. பாஜக கூட்டணியில் சேராமல் இருந்தது வருத்தத்தை தந்தாலும், திமுககூட்டணியில் சேருவார் என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத் தக்கது.
 
ஏனென்றால் தொடர்ந்து ஊழலை எதிர்க்கும் ஒருகட்சியாக பாஜக.,வைப் போன்றே, தேமுதிகவும் நிற்க வேண்டும் என்று நினைத்திருப்பது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாங்கள் அனைவரும் சேர்ந்து இருக்கவேண்டும் என்று நினைத்தது, வாக்குகள் சிதறாமல் பெறவேண்டும் என்பதற்காகத்தான். திமுக போன்ற கட்சிகளுடன் சேர்ந்து அந்தகனவு சிதைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அந்தந்த கட்சியும் தனித்து நின்று தங்களதுபலத்தை நிரூபிப்பது தமிழக அரசியலில் நல்ல திருப்புமுனை என்று நினைக்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...