அகங்காரத்தைச் செதுக்குவோம்

ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு.

உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் குலத்தில் பிறந்தவர். ராமானுஜர் காவிலி ஆற்றில் குளிக்கப் போகிற போது நடக்க சிரமமாக இருந்தால் பிராமண சீடர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடப்பார். ஆனால் குளித்து விட்டு

கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டு நடக்க மாட்டார்.

தாழ்ந்தப்பட்ட குலத்தைச் சார்நத் உறங்காவில்லி இருந்தால் அவர் தோளில் கை போட்டபடி மகிழ்ச்சியாக நடப்பார். இது அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர்ந்த ஜாதியான நம் தோளைக் குளிக்கும் முன் தொடுகிறார். குளித்து விட்டு வரும் சமயம் தாழ்த்தப்பட்டவர் தோளைத் தொடுகிறாரே என்று அவர்களுக்கு வருத்தம்.

ஒரு நாள் வேண்டும் என்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமானுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமானுஜர் தம் மேல் துண்டைத் தண்ணீர் நனைத்து ஈராமாக்கி சீடர்கள் தோள் மேல் போட்டு விடு அதன் மீது கை வைத்து நடந்தார். "ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்?" என்று கேட்டதும், " உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான்" என்றார். "தாழ்த்தப்பட்ட வில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த பிராமண ஜாதயில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?" என்று குமுறினார்கள்.

"உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? அதனால் தான் அவனைத் தொடும் போது ஈரத்துணியைத் தோளில் போடாது தொடுகிறேன்" என்றார் ராமானுஜர்.

பாறாங்கல்லில் சிற்பி வெட்டி எறிகிற முதல் துண்டு மாதிரி நாம் கடவுளாக, நம்மைச் செதுக்க நாம் வெட்ட வேண்டிய முதல் துண்டு ஜாதித்திமிர்… நான் இன்ன ஜாதி என்கிற அகங்காரத்தில் இருந்து விடுபடுவது நம்மைச் செதுக்கும் முதல் செதுக்கல் …

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...