உலக எய்ட்ஸ் தினம்

​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெருந்தொற்றுக்குஎதிரான ஒற்றுமையை நிரூபிப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது. தற்போதையசவால்களை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், தடுப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அரசுகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இது ஒருவாய்ப்பாகும். மிக முக்கியமான சர்வதேச சுகாதார அனுசரிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், விழிப்புணர்வைபரப்புவது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்கிறது மற்றும் சுகாதார சேவைகளுக்கானவிரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற மைல்கற்களைக் கொண்டாடுகிறது.

ஹெச்.ஐ.வி ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதைப் பற்றிய புரிதலை வளர்ப்பதன் மூலம், உலக எய்ட்ஸ் தினம், அந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையைஅடைவதற்கும் இடையிலான ஒருங்கிணைந்த தொடர்பை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

2024 கருப்பொருள்: “உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!”

2024 க்கான கருப்பொருள்,”உரிமைப் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!” என்பதாகும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் அத்தியாவசிய ஹெச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் முறையான சமத்துவமின்மைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொருவரும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஆரோக்கியத்திற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதில் மனித உரிமைகளின் பங்கை இந்த ஆண்டு கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. இந்த உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையில் கவனம் செலுத்துவதன் மூலம், 2024 பிரச்சாரம், உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், களங்கத்தைக் குறைப்பதற்கும், பொது சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸை ஒழிப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் முயல்கிறது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸின் தற்போதைய நிலை​

ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியிட்ட உலகளாவிய எய்ட்ஸ் புதுப்பிப்பு 2023 இன் படி, ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன, அங்கு ஒரு வலுவான சட்ட  கட்டமைப்பு மற்றும் அதிகரித்த நிதி முதலீடுகள்,  எய்ட்ஸ் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதை 2030 க்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்தியதற்காக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில், இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெச்.ஐ.வியுடன் வாழ்ந்து வருவதை இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, வயது வந்தோருக்கான ஹெச்.ஐ.வி பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி  நோய்த்தொற்றுகள் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 முதல் 44% குறைவு. உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட இந்தியா 39% சிறப்பாக செயல்பட்டுள்ளது, இது நீடித்த தலையீடுகளின் வெற்றியை நிரூபிக்கிறது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு இந்தியாவின் பதில்

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போர் 1985-ஆம் ஆண்டில் பல்வேறு மக்கள்தொகை குழுக்கள் மற்றும் புவியியல் இடங்களில் தொற்றைக் கண்டறியும் பணி செரோ-கண்காணிப்புடன் தொடங்கியது. ஆரம்ப கட்டம் (19851991) ஹெச்.ஐ.வி நோயாளிகளை அடையாளம் காணுதல், ரத்தமாற்றங்களுக்கு முன் ரத்த பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இலக்கு விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. 1992-ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தடுப்பு வேகம் பெற்றது. இது நாட்டில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸைக் கையாள்வதற்கான முறையான மற்றும் விரிவான அணுகுமுறையின் தொடக்கத்தைக் குறித்தது.

முடிவு

உலக எய்ட்ஸ் தினம் 2024 ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை அகற்ற இன்னும் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்டுகிறது. தடுப்பு, சிகிச்சை மற்றும் கவனிப்பு ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், முறையான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக களங்கம் போன்ற சவால்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். 2030க்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி உலகம் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் முயற்சிகள் கூட்டு நடவடிக்கை, புதுமையான உத்திகள் மற்றும் சுகாதார சமத்துவத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...