சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம்

குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம் ஒதுக்கப்படும் என முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.

 

தாராவி பகுதியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பை மந்திரால யாவில் உள்ள அவரது அறையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ., ரவீந்திரவைக்கர் எம்.எல்.ஏ., தாராவி பா.ஜனதா மண்டல தலைவர் மணிபாலன் மற்றும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் உள்ள குடிசைப் பகுதிகளை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க ப்பட்டது. அப்போது கேப்டன் தமிழ்செல்வன் எம்எல்ஏ., முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கூறியதாவது:–

குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தபகுதியிலேயே வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அங்கு சிறு தொழில் செய்வோருக்கு வேறு பகுதியில் இடம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அந்ததிட்டத்தை கைவிட்டு விட்டு தாராவியில் பல்வேறு சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்தபகுதியிலேயே தொழில் செய்யும் வகையில் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறினார்.

கேப்டன் தமிழ்செல்வனின் இந்த கோரிக்கையை ஏற்று, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தாராவி பகுதியில் சிறு தொழில் செய்வோருக்கு அந்த பகுதியிலேயே இடம் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...