சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம்

குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம் ஒதுக்கப்படும் என முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.

 

தாராவி பகுதியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பை மந்திரால யாவில் உள்ள அவரது அறையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ., ரவீந்திரவைக்கர் எம்.எல்.ஏ., தாராவி பா.ஜனதா மண்டல தலைவர் மணிபாலன் மற்றும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் உள்ள குடிசைப் பகுதிகளை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க ப்பட்டது. அப்போது கேப்டன் தமிழ்செல்வன் எம்எல்ஏ., முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கூறியதாவது:–

குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தபகுதியிலேயே வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அங்கு சிறு தொழில் செய்வோருக்கு வேறு பகுதியில் இடம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அந்ததிட்டத்தை கைவிட்டு விட்டு தாராவியில் பல்வேறு சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்தபகுதியிலேயே தொழில் செய்யும் வகையில் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறினார்.

கேப்டன் தமிழ்செல்வனின் இந்த கோரிக்கையை ஏற்று, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தாராவி பகுதியில் சிறு தொழில் செய்வோருக்கு அந்த பகுதியிலேயே இடம் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...