சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம்

குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம் ஒதுக்கப்படும் என முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.

 

தாராவி பகுதியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பை மந்திரால யாவில் உள்ள அவரது அறையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ., ரவீந்திரவைக்கர் எம்.எல்.ஏ., தாராவி பா.ஜனதா மண்டல தலைவர் மணிபாலன் மற்றும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் உள்ள குடிசைப் பகுதிகளை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க ப்பட்டது. அப்போது கேப்டன் தமிழ்செல்வன் எம்எல்ஏ., முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கூறியதாவது:–

குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தபகுதியிலேயே வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அங்கு சிறு தொழில் செய்வோருக்கு வேறு பகுதியில் இடம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அந்ததிட்டத்தை கைவிட்டு விட்டு தாராவியில் பல்வேறு சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்தபகுதியிலேயே தொழில் செய்யும் வகையில் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறினார்.

கேப்டன் தமிழ்செல்வனின் இந்த கோரிக்கையை ஏற்று, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தாராவி பகுதியில் சிறு தொழில் செய்வோருக்கு அந்த பகுதியிலேயே இடம் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...