5 மாநில தேர்தல் முடிவு மோடியின் வளர்ச்சி திட்டத்துக்கு கிடைத்த வெற்றி

5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அங்கீகரிக்கப் பட்டு இருப்பதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

 

அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி அசாமில் முதல் முறையாக ஆட்சியைபிடித்தது. கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் தங்கள் வெற்றிகணக்கையும் தொடங்கி உள்ளது.

இந்த தேர்தல்வெற்றிக்கான காரணம், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

 

எங்கெல்லாம் கூட்டணிக்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் கூட்டணி அமைத்து, பிரச்சினைகளை அடையாளம்கண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதே சமீபத்திய 5 மாநில தேர்தல் மூலம் நாங்கள் கற்றபடிப்பினை ஆகும்.

அதற்காக, அசாமில் காங்கிரஸ்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடாததால்தான் தோல்வியடைந்தது என்ற நிதிஷ்குமாரின் கருத்தை ஏற்கமுடியாது. காரணம் கூட்டணி மட்டும் போதாது. உங்கள் செயல்பாடு, பிரச்சினைகளை அணுகும்விதம், தலைமைத்துவம் உள்ளிட்டவையும் தேர்தலின்போது கணக்கில் கொள்ளப்படும்.

அந்த வகையில் அசாம் மற்றும் கேரளாவில் காங்கிரசின் செயல்பாடு மிகவும்மோசமாக இருந்தது. ஊழலில் சிக்கியுள்ள அக்கட்சியால், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மேற்குவங்காளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தும் எந்தபலனும் ஏற்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தையே தேர்தல்முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சி ஓரம்கட்டப்பட்டு உள்ளது. அதேநேரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துவரும் கட்சியாக பா.ஜனதா உருமாறி வருகிறது.

30 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக நாங்கள் உருவெடுத்தோம். தற்போது 15 மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் ஆட்சியில் உள்ளன. 35 சதவீத மக்கள்தொகை மற்றும் நாடடின் 45 சதவீத பகுதிகள் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...