கர்நாடகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பேன்

கர்நாடகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்று பா.ஜ.க வேட்பாளரான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லி மேல்சபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று வேட்புமனு தாக்கல்செய்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கன்னடமொழியை கற்க முயற்சிசெய்வேன். ஏற்கனவே இந்தமுயற்சியை தொடங்கிவிட்டேன். மாநிலத்தின் நிலம், நீர், மொழி, எல்லை பிரச்சினைகளில் கர்நாடகத்தின் நலனுக்காக குரல்கொடுப்பேன். கர்நாடக மக்களுக்கு சேவையாற்றுவேன். பிரதமர் மோடி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை கர்நாடகத்திற்கு அனுப்பியுள்ளார்.

கர்நாடக மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்புகிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி செய்தபோது எடியூரப்பா ஏராளமான திட்டங்களை அமல் படுத்தினார். விவசாயிகளுக்கு தனியாக விவசாய பட்ஜெட்டை அவர் தாக்கல்செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், பாக்ய லட்சுமி திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நல திட்டங்களை எடியூரப்பா அமல்படுத்தினார்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்சபைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கர்நாடக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். அவர் கர்நாடகத்திற்கு எந்தசேவையும் ஆற்றவில்லை என்று குறை கூறி டிக்கெட் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. வேறுசில காரணங்களால் கட்சி என்னை கர்நாடகத்தில் போட்டியிட அனுமதி வழங்கியுள்ளது இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...