பிரதமர் நரேந்திர மோடி அமெரிக் காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயங்கர வாதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத் திட்டுள்ளன.
அமெரிக்காவின், பயங்கரவாதிகள் பற்றிய தகவல்மையம் பராமரித்து வரும் உலகளாவிய பயங்கரவாத வலைப் பின்னல் மற்றும் தரவுகளை பகிர்ந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறைசெயலர் ராஜீவ் மெரிஷி, இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் ரிச்சர்ட் வெர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளனர்.
அமெரிக்க பயங்கரவாத தகவல் மையத்திடம் சுமார் 11,000 பயங்கர வாதிகள் பற்றிய தகவல்பெட்டகம் உள்ளன. அதாவது பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் நாடு, பிறந்ததேதி, படங்கள், கைரேகை, மற்றும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை இந்த தகவல்களில் அடங்கும்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.