மத்திய அரசின் உணவு பாதுகாப்புசட்டம் 33 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

நாட்டில் தற்போது 3 கோடியே 70 லட்சம் காஸ்இணைப்பு பெற்றுள்ள வாடிக்கை யாளர்கள் உள்ளனர். அதை 5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்  செய்துள்ளோம் என்று மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு எவ்வளவு விலை கொடுக்கவேண்டும் என்று  மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதோ அதை சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டும். அதை வாங்கி கொடுக்கும்பொறுப்பு அந்தந்த மாநில அரசுகளுக்கு உள்ளது.  மேலும் கரும்பு சப்ளைசெய்யும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பில் செட்டில்மெண்ட் செய்யதவறினால், ஆலை நிர்வாகம் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை  எடுக்கவேண்டும். மேலும் மக்கள் அன்றாடும் பயன் படுத்தும் உணவு பொருட்கள் மீதான தரத்தை உறுதிசெய்ய ஒவ்வொரு பொருட்களுக்கும் ஐஎஸ்ஐ அங்கீகாரம்  பெறுவதை கட்டாயமாக்கப்படும். மேலும் தரம்குறைந்த, பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான உணவு பொருட்கள் விற்பனைசெய்யும்  கம்பெனிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பலநிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை விற்பனைசெய்யாமல் வஞ்சிக்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்தும் நோக்கத்தில்  விரைவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும். நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் நீதி மன்றம் அமைக்கப்படும். மேலும் தங்க  ஆபரணங்கள் மீது ஹால் மார்க் முத்திரை பதிப்பது கட்டாயமாக்கப்படும். மேலும் நாட்டில் நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் வகையில், வரும் நாடாளுமன்ற  கூட்டத்தொடரில் புதியதாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். இதற்கு நாடாளுமன்ற நிலை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில்  பொய்விளம்பரம் செய்வோர், விளம்பர தூதராக இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பது உள்பட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோரின் வழக்குகளை விசாரணை நடத்த மாவட்ட மாநில தேசிய அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதில் மாவட்ட நீதிமன்றங்களில் 1 கோடி,  மாநில மற்றும் தேசிய நீதிமன்றங்களில் தலா 10 கோடி வழக்குகள் விசாரிக்கும்வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.நாடுமுழுவதும் தற்போது 3 கோடியே 70 லட்சம்  காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். வரும் மூன்றாண்டுகளில் அதை 5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். மேலும் எனது  துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 6.2 கோடி போலி வாடிக்கையாளர்கள் கண்டுப்பிடிக்கப் பட்டு காஸ் இணைப்பு ரத்து  செய்யப்பட்டது.

இதன்மூலம் 10 ஆயிரம் கோடி வரை மானியம் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்புசட்டம் 33 மாநிலங்களில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டபிதா டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழாவை அர்த்த பூர்வமாக கொண்டாடும் வகையில் அவர் பிறந்தவீடு, வாழ்ந்த  வீடு, உள்பட 5 இடங்களில் நினைவிடம் அமைப்பது உள்பட பலபணிகள் நடந்து வருகிறது. பாஜ ஆட்சி நாட்டிற்கு பொற்காலமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர்  கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...