வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது விவசாயிகளுக்கு மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதை தடுப்பதற்காக உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் பெங்களூரில் இயங்கும் பிரிக் – இன்ஸ்டெம் நிறுவனமும், மற்றொரு தனியார் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான கவச உடையை தயாரித்துள்ளன. இலகுவான இந்த உடையை அணிந்து வயலில் மருந்து தெளிப்பது எளிதாக இருக்கும் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. துவைத்து அணியும் வகையிலான இந்த பாதுகாப்பு உடையின் விலை 4,000 ரூபாய்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |