பசியும், பட்டினியும் இல்லாத பாரதம்

திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும் என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அகங்காரத்தோடு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் மக்கள் மூன்று வேளையும் உணவு உண்ணுகிறார்கள் மஹாராஷ்ட்ரா உள்பட மற்ற மாநிலங்களில் 30% முதல் 40% மக்கள் ஒருவேளை தான் உணவு உண்ணுகிறார்கள் என்று உண்மைக்கு மாறான பொய்யான தகவலை பொதுவெளியில் பேசி இருக்கிறார்.
ஆனால் உண்மை என்னவெனில்…

பசியும், பட்டினியும் இல்லாத பாரதத்தை காணவேண்டும் என்கிற உன்னதமான நோக்கத்தோடு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் என்கிற பெயரில் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் மானியமாக வழங்கி வருகிறார். அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இலவசமாக வழங்கி வருகிறார். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிற உணவுப் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிற பொருட்கள் தான்.
உண்மை நிலையை மறைத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- பணத்தில் தான் தமிழக மக்கள் பசியாறுகிறார்கள் என்று பேசி இருப்பது திமுகவின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வருகிற ரூ.1000/- மகளிர் உரிமைத் தொகையை வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என திமுக அரசே பல பெயர்களில் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து கட்டண உயர்வு மூலம் பலமடங்கு திரும்ப வசூலித்து விடுகிறது.

திருடர்கள் வழிப்பறி செய்வது போல இந்த திராவிடர்கள் ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் அனைத்து வரிகளையும் உயர்த்தி கட்டண உயர்வு என்கிற பெயரில் மக்களிடம் இருந்து “வரி”ப்பறி செய்து வருகிறார்கள்.

மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போது 2021- 2022 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4,56,660.99/- கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.8,33, 361/- கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் பெயரில் திமுக அரசு ரூ.3,76,700.81/- கோடி கடன் வாங்கி இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் ரூ.1.05/- லட்சம் கோடி கடன் வாங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

கடன் வாங்கி ஆட்சி நடத்தும் போதே திமுக அரசு இவ்வளவு ஆணவமாக பேசுகிறதே? மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய, வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய கடன் வாங்குவதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் மாநிலத்தின் நிர்வாக செலவினங்களுக்காகவும், ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் கடன் வாங்குவது எவ்வளவு மோசமானது என்பது குறித்து திமுக அரசு சிந்திப்பதாக தெரியவில்லை.

கடன் வாங்கி ஆட்சி நடத்தும் போதே ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் திமிராக பேசுகிறதே திமுக? திமுக திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதற்கும் திமுக அமைச்சர்களின் ஆணவ நடவடிக்கைகளும் ஒரு உதாரணம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.1000/- வழங்குவதாக பெருமை பேசுகிறதே திமுக அரசு…
திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரில் இருந்த கடன் ரூ.2,15,517/- கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.3,70,026/- (வருகிற 2025 மார்ச் மாதம் வரும் போது தமிழகத்தின் மொத்த கடன்தொகை அளவின் விகிதாச்சார அடிப்படையில்) உயர்த்தியுள்ளதே திமுக அரசு. அதுவும் மூன்றே ஆண்டுகளில் ரூ.1,54,509/- கடனை கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் சுமக்க வைத்திருக்கிறதே அதற்கு பொறுப்பேற்க வேண்டியது திமுக தானே அதுகுறித்து திமுக தலைவர்கள் பேசத்தயாரா? தமிழக முதல்வர் திரு. M. K. Stalin அவர்கள் இதற்கு பதிலளிப்பாரா?.

நன்றி H.ராஜா

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...