வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி இலக்கு நிர்ணயித் துள்ளார்.

வருமான வரித்துறை நிர்வாகிகளுக்கான 2 நாள் வருடாந்திர கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வருமான வரித்துறை நிர்வாகத்தின் அடித்தளமானது வருவாய், பொறுப்பு, நேர்மை, தகவல், கணினிமய மாக்கம் ஆகிய 5 தூண்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

அனைத்து குடிமக்கள் மத்தியிலும், வருமான வரிச் சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற எண் ணத்தை உருவாக்க வேண்டும். அதேநேரம் வரிஏய்ப்பு செய் தால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களும் வருமான வரித்துறை அதிகாரிகளைப் பார்த்து அச்சப்படக்கூடாது.

இந்தியர்கள் இயற்கையாகவே நேர்மையானவர்கள். வரியை செலுத்துவதில் அவர்களுக்கு தயக்கம்இல்லை. ஆனால் இதில் அவர்களுக்கு சிலபிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் புரிந்துகொண்டு அதற்கான தீர்வை கண்டுபிடிக்கவேண்டும்.

வரிமானவரி வசூல் இலக்கை எட்டுவதற்காக, வரி செலுத்துவோருக்கும் வருமான வரித்துறைக்கும் இடையே அதிகாரிகள் நம்பிக்கை பாலம் அமைக்கவேண்டும். பொதுமக்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்ளாமல் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். அனை வரையும் வரி ஏய்ப்பாளர்களைப் போல கருதக்கூடாது.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இப்போது 5.43 கோடியாக உள்ளது. இதை இருமடங்காக (10 கோடி) அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கணக்கில் காட்டாத வருமானத்தை (கருப்பு பணம்) சிலர் பதுக்கி வைத்துள்ளனர். இவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நட்பு ரீதியாக அணுகினால், அந்தப்பணத்துக்கான வரி தானாக அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...