வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி இலக்கு நிர்ணயித் துள்ளார்.

வருமான வரித்துறை நிர்வாகிகளுக்கான 2 நாள் வருடாந்திர கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வருமான வரித்துறை நிர்வாகத்தின் அடித்தளமானது வருவாய், பொறுப்பு, நேர்மை, தகவல், கணினிமய மாக்கம் ஆகிய 5 தூண்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

அனைத்து குடிமக்கள் மத்தியிலும், வருமான வரிச் சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற எண் ணத்தை உருவாக்க வேண்டும். அதேநேரம் வரிஏய்ப்பு செய் தால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களும் வருமான வரித்துறை அதிகாரிகளைப் பார்த்து அச்சப்படக்கூடாது.

இந்தியர்கள் இயற்கையாகவே நேர்மையானவர்கள். வரியை செலுத்துவதில் அவர்களுக்கு தயக்கம்இல்லை. ஆனால் இதில் அவர்களுக்கு சிலபிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் புரிந்துகொண்டு அதற்கான தீர்வை கண்டுபிடிக்கவேண்டும்.

வரிமானவரி வசூல் இலக்கை எட்டுவதற்காக, வரி செலுத்துவோருக்கும் வருமான வரித்துறைக்கும் இடையே அதிகாரிகள் நம்பிக்கை பாலம் அமைக்கவேண்டும். பொதுமக்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்ளாமல் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். அனை வரையும் வரி ஏய்ப்பாளர்களைப் போல கருதக்கூடாது.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இப்போது 5.43 கோடியாக உள்ளது. இதை இருமடங்காக (10 கோடி) அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கணக்கில் காட்டாத வருமானத்தை (கருப்பு பணம்) சிலர் பதுக்கி வைத்துள்ளனர். இவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நட்பு ரீதியாக அணுகினால், அந்தப்பணத்துக்கான வரி தானாக அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.