பருப்பு, தக்காளிவிலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

பருப்பு, தக்காளிவிலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று சென்னையில் இருந்து விமானம்மூலம் கோவைக்கு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
நாடுமுழுவதும் தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். 
 
தக்காளி உள்பட உணவுபொருட்கள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை போன்றவை நடக்கிறதா? என்பதை ஆய்வுசெய்து அவற்றை தடுக்க உத்தரவிட்டுள்ளார். பருப்பு விலையையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. 
 
இந்தியாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விலை உயர்வு அதிக நாட்கள் இருக்காது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறது. 
 
ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழக சட்ட சபையில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும். சிலை கடத்தல் விவகாரத்தில் அரசு விசாரணையை துரிதப் படுத்த வேண்டும். கோவில்களில் உள்ள சிலைகளின் தன்மை குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...