பருப்பு, தக்காளிவிலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

பருப்பு, தக்காளிவிலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று சென்னையில் இருந்து விமானம்மூலம் கோவைக்கு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
நாடுமுழுவதும் தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். 
 
தக்காளி உள்பட உணவுபொருட்கள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை போன்றவை நடக்கிறதா? என்பதை ஆய்வுசெய்து அவற்றை தடுக்க உத்தரவிட்டுள்ளார். பருப்பு விலையையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. 
 
இந்தியாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விலை உயர்வு அதிக நாட்கள் இருக்காது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறது. 
 
ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழக சட்ட சபையில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும். சிலை கடத்தல் விவகாரத்தில் அரசு விசாரணையை துரிதப் படுத்த வேண்டும். கோவில்களில் உள்ள சிலைகளின் தன்மை குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...