இந்திய விமானப் படையில் நேற்று மிகவும் எடைகுறைந்த ‘தேஜஸ்’ போர் விமானம் இணைக்கப் பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிகவும் எடைகுறைந்த ‘தேஜஸ்’ என்ற போர் விமானத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த தேஜஸ் போர்விமானம், உலகின் மிகவும் எடை குறைந்தபோர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் JF 17 போர் விமான ங்களை விட அதிக சக்திவாய்ந்த இலகுரக போர் விமானமான தேஜாஸ் முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டதாகும். நீண்ட கால தாமதத்திற்கு பின் முதல் முறையாக இன்று 2 தேஜாஸ் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் வரை பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இந்தவிமானங்கள் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், தமிழ்நாட்டில் உள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு இவை அனுப்பி வைக்கப்படும் என தெரியவந்துள்ளது.
இந்திய விமானப்படையில் உள்நாட்டு தயாரிப்பான ‘தேஜஸ்’ போர்விமானம் இணைக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ட்விட்டரில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், முழுமையாக உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர்விமானம் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப் பட்டுள்ளது நமது இதயங்களில் அளவற்ற பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கி யுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.