எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச் சரவையில் ஸ்மிருதி இரானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை மாற்றியமைத்தபோது, அவரிடம் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறை பறிக்கப்பட்டு, அதற்குப்பதிலாக ஜவுளித் துறை அளிக்கப்பட்டது. கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜாவடேகரிடம் மனிதவள மேம்பாட்டுத்துறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் ஜவுளித்துறை அமைச்சகத்துக்குச் சென்று தனது பொறுப்பை ஸ்மிருதி இரானி புதன்கிழமை ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மிருதி இரானியிடம், அமைச்சரவையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டது கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "எனது இலாகாவை மாற்றுவது தொடர்பானமுடிவை தனிப்பட்ட நபர்கள் எடுக்கவில்லை; கட்சிதான் அந்தமுடிவை எடுத்துள்ளது' .

இதேபோல், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஸ்மிருதி இரானி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இலாகா மாற்றப்பட்டதா? எனவும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஹிந்தி திரைப்படப் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, "எதையாவது மக்கள் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில், அதுதான் அவர்களின் பணியாகும்' என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன். குறிப்பாக, எனது துறைக்குதான் சிறப்புத்தொகை (ஜவுளித் துறைக்கு ரூ.6,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு மத்திய அமைச்ச ரவையால் வகுக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் திறன் எனக்குஇருக்கிறது என்று கட்சியும், பிரதமரும் நம்புகின்றனர் என்பதையே இதுகாட்டுகிறது.

விரைவில் புதிய ஜவுளிக்கொள்கை: பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ஸ்மிருதி இரானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...