எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச் சரவையில் ஸ்மிருதி இரானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை மாற்றியமைத்தபோது, அவரிடம் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறை பறிக்கப்பட்டு, அதற்குப்பதிலாக ஜவுளித் துறை அளிக்கப்பட்டது. கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜாவடேகரிடம் மனிதவள மேம்பாட்டுத்துறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் ஜவுளித்துறை அமைச்சகத்துக்குச் சென்று தனது பொறுப்பை ஸ்மிருதி இரானி புதன்கிழமை ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மிருதி இரானியிடம், அமைச்சரவையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டது கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "எனது இலாகாவை மாற்றுவது தொடர்பானமுடிவை தனிப்பட்ட நபர்கள் எடுக்கவில்லை; கட்சிதான் அந்தமுடிவை எடுத்துள்ளது' .

இதேபோல், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஸ்மிருதி இரானி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இலாகா மாற்றப்பட்டதா? எனவும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஹிந்தி திரைப்படப் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, "எதையாவது மக்கள் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில், அதுதான் அவர்களின் பணியாகும்' என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன். குறிப்பாக, எனது துறைக்குதான் சிறப்புத்தொகை (ஜவுளித் துறைக்கு ரூ.6,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு மத்திய அமைச்ச ரவையால் வகுக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் திறன் எனக்குஇருக்கிறது என்று கட்சியும், பிரதமரும் நம்புகின்றனர் என்பதையே இதுகாட்டுகிறது.

விரைவில் புதிய ஜவுளிக்கொள்கை: பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ஸ்மிருதி இரானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...