எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச் சரவையில் ஸ்மிருதி இரானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை மாற்றியமைத்தபோது, அவரிடம் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறை பறிக்கப்பட்டு, அதற்குப்பதிலாக ஜவுளித் துறை அளிக்கப்பட்டது. கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜாவடேகரிடம் மனிதவள மேம்பாட்டுத்துறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் ஜவுளித்துறை அமைச்சகத்துக்குச் சென்று தனது பொறுப்பை ஸ்மிருதி இரானி புதன்கிழமை ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மிருதி இரானியிடம், அமைச்சரவையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டது கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "எனது இலாகாவை மாற்றுவது தொடர்பானமுடிவை தனிப்பட்ட நபர்கள் எடுக்கவில்லை; கட்சிதான் அந்தமுடிவை எடுத்துள்ளது' .

இதேபோல், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஸ்மிருதி இரானி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இலாகா மாற்றப்பட்டதா? எனவும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஹிந்தி திரைப்படப் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, "எதையாவது மக்கள் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில், அதுதான் அவர்களின் பணியாகும்' என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன். குறிப்பாக, எனது துறைக்குதான் சிறப்புத்தொகை (ஜவுளித் துறைக்கு ரூ.6,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு மத்திய அமைச்ச ரவையால் வகுக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் திறன் எனக்குஇருக்கிறது என்று கட்சியும், பிரதமரும் நம்புகின்றனர் என்பதையே இதுகாட்டுகிறது.

விரைவில் புதிய ஜவுளிக்கொள்கை: பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ஸ்மிருதி இரானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...