முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் – மத்திய அரசு ஒப்புதல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதற்காக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், ‘ எனது தந்தை இறந்தபோது, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை. ஜனாதிபதி 4 பேருக்கு இவ்வாறு கூட்டவில்லை என மூத்த தலைவர் ஒருவர் கூறினார். கே.ஆர்.நாராயணன் மறைவை அடுத்து காங்., செயற்குழு கூட்டியதும், இரங்கல் தீர்மானத்தை தயார் செய்ததும் அப்பாதான் என அவரது நாட் குறிப்பு மூலம் பின்னர் தெரிந்து கொண்டது வேதனையாக இருந்தது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது ஒரு சிறந்த யோசனை. ஜனாதிபதியாக எனது தந்தை இருந்தபோது, மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்பினார். ஆனால், இரண்டு காரணங்களில் அது நடக்கவில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவுக்காக பிரதமர் மோடியை சந்தித்து மனதார எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நாங்கள் கேட்காத போதும், அனுமதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் எதிர்பாராத இந்த கருணையால் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அரசு மரியாதையை கேட்கக்கூடாது. அரசே வழங்க வேண்டும் என தந்தை அடிக்கடி கூறுவார். அவரின் நினைவைப் போற்றும் வகையில், பிரதமர் மோடி இதைச் செய்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவராக இருக்கிறேன். அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...