சுதந்திரதினத்தை பாரதவிழாவாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு பரிசிலனை

சுதந்திரதினத்தை பாரதவிழாவாக கொண்டாடுவதற்கு மத்தியில் ஆளும்  அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் சுதந்திரதினம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை பாரதவிழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதையொட்டி, தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரத விழா, ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கப்படும். ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடையும். இதையொட்டி, இந்தியா கேட் பகுதி விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லி ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் மூலம், நாட்டு மக்களிடையே தேசபக்தி ஊக்குவிக்கப்படும். இதுதவிர, ராஜபாதை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அந்த அரங்குகளில், பல்வேறு மாநிலங்களும் தங்களது சமையல், கைவினை தயாரிப்புப் பொருட்கள் பார்வைக்கு வைக்கவுள்ளன.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இந்தியா கேட் பகுதியில் இரண்டரை மாதங்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் போன்ற ஹிந்தி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், பாரதவிழா நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உள்ளுர் கலையுல கத்தினர் பங்கேற்பார்கள். பாதுகாப்புப் படைவீரர்கள் சார்பாகவும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இந்திய சுதந்திரதினத்தை இதுபோன்ற விழாவாக கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சுற்றுலா அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...