பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

அதிபர் அவர்களே,

உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கசான் போன்ற அழகான நகரத்திற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. கசானில் ஒரு புதிய இந்திய தூதரகம் திறக்கப்படுவது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

அதிபர் அவர்களே,

கடந்த மூன்று மாதங்களில் ரஷ்யாவுக்கு நான் மேற்கொண்ட இரண்டு பயணங்கள் நமது நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நட்புறவை பிரதிபலிக்கின்றன. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் மூலம் ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.

அதிபர் அவர்களே,

கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். கடந்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதன் தனித்துவமான அடையாளத்தை நிறுவியுள்ளது. இப்போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் அதில் இணைய விரும்புகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

அதிபர் அவர்களே,

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்டது போல, பிரச்சினைகளின் தீர்வு அமைதியான வழிமுறைகள் மூலம் மட்டுமே களையப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எங்கள் முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. எதிர்காலத்திலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

அதிபர் அவர்களே,

இந்த அனைத்து அம்சங்களிலும் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இன்று மற்றொரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும், பல நன்றிகள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...