கொள்கைகளுக்காக மட்டுமே வாழும் தலைவர்கள்

"அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி' என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சிக்கும் இல்லாத பல சிறப்புகள் நமக்கு (பாஜக) உள்ளன.

கொள்கை மீதான அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் வாரிசு அரசியல் இல்லாத உள்கட்சிஜனநாயகம் பாஜகவில் தான் உள்ளது. இத்தகைய சிறப்பியல்புகளை சர்வதேச சமூகரங்கில் நமது கட்சித் தொண்டர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அதைக்காட்டிலும் அதிக அளவிலான கஷ்டங்களையும், சவால்களையும் பாஜக சந்தித்துள்ளது.

பாஜக தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை நமதுதொண்டர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் தவறாக சித்திரிக்கப் படுகின்றன.

அண்மையில் மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜக சார்பில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்க பெரும்பாலானோர் இடம் கொடுக்கவில்லை. அதற்குக்காரணம் அந்த மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸின் அச்சுறுத்தல்தான். உண்மையை சொன்னால், வேறு எந்தக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜக வேட்பாளர்கள் அளவுக்கு டெபாசிட் தொகையை இழந்திருக்க மாட்டார்கள். வெற்றி – தோல்வியைப் பற்றி கவலைகொள்ளாமல், முன்னெடுத்த கொள்கைக்காக செயல்படுவது நம் கட்சிதான்.

எல்.கே.அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் நம்பக்கம் இருந்திருந்தால் சிறப்பாகச் செயலாற்றி வெற்றிபெற்றிருக்க முடியும் என்று பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நினைத்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், கொள்கைகளுக்காக மட்டுமேவாழும் தலைவர்கள் அவர்கள்.

பாஜக தொண்டர்களை பொருத்தவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட்டத்தை திரட்டும் நோக்கத்திற்காக அவர்கள் பணியாற்றுவதில்லை. பரபரப்பான விஷயங்களைப்பற்றி கவர்ச்சியாக பேசினால் கூட்டத்தைக்கூட்ட முடியும். ஆனால், தொண்டர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சியின் கொள்கைகளுக்கு மட்டுமே மதிப்பளித்து செயலாற்று கின்றனர் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...