ரிலையன்ஸ் ஜியோ பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்லிடப் பேசி சேவை தொடர்பான விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.


இது குறித்து தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டி வருமாறு: டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தபோது, டிஜிட்டல் பாகுபாடு நிலவுவதை முடிவுக்கு கொண்டுவரவே அதைத் தொடங்கி வைத்துள்ளார் என்று நான் நினைத்தேன்.


நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை யார் வழங்கினாலும் சரி, அவர்கள் பிரதமரின் கனவை பூர்த்திசெய்கிறார்கள் என்றே அர்த்தமாகும். அந்தவகையில் பார்த்தால், ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் படம் பயன்படுத்தப் பட்டிருப்பதில் எந்தத்தவறும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவுக்கு பிற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று எனக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 முதல் 20 தலைவர்கள் புகார்க்கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில், அந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் படம் பயன்படுத்தப்பட்டதை காங்கிரஸ் குறை கூறியது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பது, ஜியோவிவகாரத்தில் அக்கட்சி இரட்டை வேடம் போடுவதை வெளிப்படுத்துகிறது.


வர்த்தக ரீதியிலான சேவைத்தொடர்பான விளம்பரத்தில் பிரதமரின் படத்தை பயன்படுத்த பிரதமர் அலுவலகத்திடம் முன் அனுமதி பெறவேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து நடைபெறும் விவாதம் குறித்து கேட்கிறீர்கள். இதற்கு என்னால் பதிலளிக்கமுடியாது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றார் சின்ஹா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...