கணக்கில்காட்டாத வருமானத்தையும் சொத்து களையும் தாமாக முன்வந்து வெளிப்படுத்தும் திட்டத்தின் (ஐடிஎஸ்) கீழ் மொத்தம் ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப்பணம் வெளிவந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கணக்கில்வராத கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் அது பற்றிய விவரங்களைத் தாமாக முன்வந்து அறிவிப்பதற்கு ஐடிஎஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு 4 மாதங்களுக்குமுன் அறிமுகம் செய்தது. இந்தவிவரங்களை வெளிப்படுத்துவதற்கு கடந்தமாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதிதான் கடைசிநாள் என்றும் தெரிவித்தது.
இத்திட்டத்துக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய நிதி யமைச்சர் அருண்ஜேட்லி, தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:
ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் 64,275 பேர் கணக்கில்வராத தங்களது வருவாய் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தி யுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.65,250 கோடியாகும். இந்தத்தொகையில் 45 சதவீதம் அளவுக்கு வரியாகவும், அபராதமாகவும் அரசுக்குச்செல்கிறது. மத்திய நிதித்தொகுப்புக்கு செல்லும் இந்தநிதியானது மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இத்திட்டமானது, கடந்த 1997ஆம் ஆண்டில் ஐக்கியமுன்னணி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட கணக்கில் வராத வருவாயை அறிவித்தால் மன்னிப்பு என்ற திட்டம் போன்றதல்ல. அப்போதைய திட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட்ட வரியின் மதிப்பு ரூ.9,760 கோடி மட்டுமே.
வருமான வரித்துறை கடந்த 2 ஆண்டுகளில் நடத்திய அதிரடிச்சோதனைகள் மூலம் ரூ.56,378 கோடி அளவுக்கு கருப்புப்பணம் கண்டறியப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரூ.2,000 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தவிர, வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்யாத வர்களிடம் இருந்து கடந்த இரு ஆண்டுகளில் ரூ.16,000 கோடி வசூலிக்கப் பட்டது என்றார் அருண் ஜேட்லி.
தற்போது தங்களது கருப்புப்பணத்தை தாமே முன்வந்து வெளியிட்டுள்ளவர்கள் மூலம் ரூ.30,000 கோடி வரை அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்தார். இந்தத்தொகையில் பாதி அளவு நடப்பு நிதியாண்டில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.