இந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம்

இந்து அமைப் புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கும், கொலை செய்யப் படுவதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக இந்த அமைப்பின் வட, தென்தமிழக தலைவர்கள் எம்.எல்.ராஜா, ஆர்.வி.எஸ்.மாரிமுத்து ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கை:


தமிழகத்தில் இந்துஅமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், படு கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம் மட்டும் பலதாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கோவையில் இந்து முன்னணி மாநகரச் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் இந்து முன்னணி நகரச்செயலர் சங்கர் கணேஷ், திருவல்லிக் கேணி நகர ஆர்எஸ்எஸ் செயலர் நரஹரி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதேபோல், கடந்த 2014 -ஆம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜ் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், வேலூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகியபகுதிகளில் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி சேதப்படுத்தப் பட்டன. ஆனால், இதுவரை எந்த சம்பவத்திலும் குற்றவாளிகளை போலீஸார் கண்டு பிடித்து, பின்னணியில் உள்ளோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.
காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் கண்டறிந்து கடும் தண்டனை வழங்கவேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் படாததை ஆர்.எஸ்எஸ் வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...