இல.கணேசன் என்ற சாம்பிராஜ்யம்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ தமிழகத்தில் காலூன்றச் செய்தவர்களில் இல.கணேசன் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 16 ஆம் நாள் இலக்குமி ராகவன் – அலமேலு தம்பதியின் மகனாக பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடுகொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார்.

மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர், குமரி முதல் திருச்சி வரையிலான மாவட்டங்களின் பொறுப்பாளர், தமிழக இணை அமைப்பாளர் என இல.கணேசன் படிப்படியாகத் தமிழகத்தில் பாஜகவின் முகமாகமாறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தனது பயணத்தை தொடங்கிய இல.கணேசன் 1991-ல் பாஜக-வின் தேசியசெயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், விரைவிலேயே மாநில தலைவர் பதவிக்கு நிகரான மாநில அமைப்புச் செயலாளர் பதவி கட்சி தலைமையால் வழங்கப்பட்டது.

1970-ல் திருச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் முன்னிலையில், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேரப்பிரசாரகராக இணைந்தார். அதைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காகவும், பாஜக-விற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பொதுவாழ்வில் இறங்கினார். குஜராத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளராக பதவிவகித்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழ்நாட்டின் மாவட்ட பொறுப்பாளராக இல.கணேசன் பதவிவகித்தார். 30 ஆண்டுகளாக பாஜக தேசிய  செயற்குழு உறுப்பினராக இருந்துவரும் இல.கணேசன் அக்கட்சியின் தேசிய தலைவராகவும், தேசிய துணை தலைவராகவும், தமிழக தலைவராகவும் பதவிவகித்திருக்கிறார். 2009 மற்றும் 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இவரை பாஜக தேர்வுசெய்து தோற்றாலும் எம்.பி என்ற அந்தஸ்தை வழங்கி சிறப்பித்தது.

சித்தாந்த ரீதியாகவும், கட்சிக் கொள்கைகளின் அடிப்படையிலும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இல.கணேசன் முரண்பட்டாலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக்கூடியவர். அரசியல்வாதியாக தேசியளவில் அறியப்படும் இல.கணேசன் பத்திரிகையாளரும்கூட. எழுதுவதில் ஆர்வம்கொண்ட இவர் பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பையும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் தொய்வில்லாமல் நடத்தி வருகிறார்.

இல.கணேசனின் அரசியல்பயணத்தில் ஆளுநர் பதவி மிகப்பெரிய ‘மைல்கல்லாக’ அனைவராலும் பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித் திருக்கும் நிலையில், அவரின் பதவியேற்பு குறித்ததான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...