சரஸ்வதி தேவியின் மகிமை

ஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.
இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம்செய்து பயன் பெற்ற பலர் உண்டு.வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுதவேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்தபொறுப்பை ஒட்டக் கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்தி தேவியையும் வணங்கி ஒட்டக் கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயணகாவியத்தை எழுத ஆரம்பித்தார்கள்.
“பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்துபணியாற்ற சொல்வதா?” என்று கடும்கோபம் அடைந்தார் ஒட்டக் கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் எதையும் அறியாதவர்போல் அமைதியாக இருந்து அரசர் தந்த இலக்கியபணியை சிறப்பாக செய்துகொண்டு இருந்தார். ஒட்டக் கூத்தரின் ஒத்துழைப்பு இல்லாததை பற்றி கம்பர் கவலைப்பட வில்லை.
ஆனால் ஒட்டக்கூத்தரோ விரோதமனதுடன் இருந்ததால் அந்த நேரத்தில் அவருக்கு சரஸ்வதிதேவியின் அருளும் கருணைபார்வையும் முழுமையாக கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஒட்டக் கூத்தர் தனியாக இயற்றினாலும் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்க வில்லை. ஞானம் இருந்தால் மட்டும் போதாது. கர்வம் இருக்கக்கூடாது. கர்வம் உள்ள மனதில் எந்த யோகமும் தங்காது. அதுவும் சரஸ்வதி தேவி, வெள்ளை நிறத்தை விரும்கிறவள். அந்த வெள்ளை நிறத்தில் ஒரு சிறுகறை பட்டாலும் அது மிகவும் பளிச்சென்று தெரியும். அதுபோல் தன்னுடைய அருளால் கல்வியறிவு பெற்றவர்கள், கர்வத்தோடு இருந்தால் அது சரஸ்வதி தேவிக்கு பிடிக்காமல் அவர்களின் மேல் கோபப்பார்வை செலுத்துவார். இதனால் ஞானம் கிடைத்தாலும் அதன் மூலமாக பெருமை கிடைக்காது.
வால்மீகி இராமாயணத்தை இயற்றியவர்
சோழ அரசர் ஒரு நாள், “இராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.?“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக் கூத்தரிடமும். கம்பர் மட்டும்தான் இராமாயணத்தை அதிகளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து, கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்கமுடியாத ஒட்டக்கூத்தர், “அரசே…இனி கம்பரே இராமாயண காவியம் எழுதிமுடிக்கட்டும்.” என்று கூறி சொல்லி விலகிகொண்டார்.
இராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவியபாடல்களாக பாடினார் கம்பர். சரஸ்வதியின் அருள்பெற்றவராக கம்பர் திகழ்ந்ததால், சபையில் இருந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டுமகிழ்ந்து தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதைகண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.
இப்படி சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால் தான் எந்த கலைகளும் எளிதாக வரும். அதில் புகழ்பெறுவார்கள். நன்மை தீமைகளை சிந்திக்கும் ஆற்றலும், தைரிய சாலியாகவும் இருப்பார்கள். கற்றகல்வியின் பயனால் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சரஸ்வதியின் அருள்பெற அன்பான உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு அதன்பயனால் சிறந்த கல்வி அறிவு பெறலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...