நாட்டின் வளர்ச்சிக்கான புதியகல்வி கொள்கையில் அரசியல் இல்லை

நாட்டின் வளர்ச்சிக்கான புதியகல்வி கொள்கையில் அரசியல் இல்லை, என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் கூறினார்.

பாரதீய ஜெயின்சங்கத்தின் 32–வது தேசியமாநாடு சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. தொடக்கவிழாவுக்கு சங்கநிறுவனர் சாந்திலால் முத்தா தலைமை தாங்கினார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

நாட்டை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தரமானவளர்ச்சியை பிரதமர் எதிர் நோக்கி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துவருகிறார். குறிப்பாக நமது கல்விதுறையிலும் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுமையான கல்வி முறைகள் தேவைப்படுகிறது. இதனால் கல்வி துறையை மேம்படுத்துவதற்காக புதிய கல்வி கொள்கையை பிரதமர் அறிவித்து உள்ளார். இது நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டுதான் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்விகுறித்த சரத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகளை சிதைப்பது புதியகல்வி கொள்கையின் நோக்கமல்ல. புதிய கல்வி கொள்கையால் மனித நேயத்தை வளர்க்கவும், மக்களிடையே ஒருமைப் பாட்டை வளர்ப்பதற்காகவும், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த புதியகல்வி கொள்கை பயன்படும். பல்வேறு மாநிலங்களில் இந்த கல்விகொள்கை குறித்து கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டுவருகிறது.

புதிய கல்விகொள்கையின் வரைவு பகுதியில் 10 சதவீதம் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. இது நிரந்தரம்இல்லை. இதுகுறித்து சரியான புரிதல் இல்லாததால் தமிழ்நாடு மற்றும் கேரளமாநிலங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இதுதேவையற்றது.

ஐ–போன் தயாரிக்க வெறும் ரூ.5 ஆயிரம் மட்மே செலவிடப் பட்டாலும், விற்பனை என்று வரும் போது அவை ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.ஆக நல்ல கண்டுப்பிடிப்புக்கு நல்லகல்வி தேவைப்படுகிறது. எனவே தான் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதியகல்வி கொள்கை கொண்டு வரப்பட உள்ளது.

 இது குறித்து வரும் 10–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கும் அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்திலும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. அனைவருடைய கருத்துகளையும் கேட்டு நாட்டின் நலன்கருதி இறுதிமுடிவு பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...