எலிகள், பூனைகள், பாம்புகள், கீரிப்பிள்ளைகள் எல்லாம் ஒரே மரத்தில்

கருப்புபணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவருகின்றன.

சண்டிகாரில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசிய அமித்ஷா, இதை கடுமையாகசாடினார். அப்போது அவர், ‘‘கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்விஎழுப்பிய எதிர்க்கட்சிகள் எல்லாம் நவம்பர் 8–ந் தேதிக்கு பின்னர் ஒப்பாரிவைக்கின்றன. மாறுபட்ட கருத்துகளைகொண்ட கட்சிகள் எல்லாம், பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கையை எதிர்க்க ஒன்றுபட்டு அணிசேர்கின்றன’’ என கூறினார்.

அத்துடன் ஒருகுட்டிக்கதை சொன்னார். அந்தக் கதை இதுதான்:–

திடீர் வெள்ளத்துக்கு மத்தியில் ஒருபெரிய மரம் இருக்கிறது என்றால் அதில் ஏறி தங்களை காப்பாற்றிக்கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.

எலிகள், பூனைகள், பாம்புகள், கீரிப்பிள்ளைகள் எல்லாம் மரத்தில் ஏறும்.அப்படி எல்லோரும் மரத்தில் ஏறியபின்னர், பூனைகள், எலிகளை தின்னாது. கீரிப்பிள்ளை, பாம்பைதாக்காது. வெள்ளம் தணிவதற்காக அனைத்தும் பயத்துடன் காத்திருக்கும்.

அதேபோன்று தான் பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத்தொடர்ந்து காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க் கட்சியினர் எல்லோரும் ஒன்றாக மரத்தில் ஏறுகின்றனர். கீழே ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் ஒழிப்பு என்ற வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தனைபேரும் பயந்துகொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டின் மக்கள், உங்கள் விளையாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களை நீங்களே காட்டிக்கொடுத்து விட்டீர்கள்’’ என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...