மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற நாட்டுக்கான புதிய பாராளுமன்ற கட்டிட திட்டம். இது டிசம்பர் 2020 ஆண்டு தொடங்கப்பட்டு வரும் மே 28 இல் திறப்பு விழா காண இருக்கிறது. அதாவது தொடங்கிய இரண்டே வருடத்தில் முடிக்கப் பட்டுள்ளது. ரூ. 970 கோடியில், 65,000 ச.மீ பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்துடன் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கும் இது தேசத்தின் பெருமையாகும்.

ஆனால் அன்று புதிய பாராளுமன்றம் தேவையற்றது, வீண் செலவு என்று ஆரம்பம் முதலே சர்ச்சைகட்டிய எதிர்க்கட்சிகள். 1927இல் கட்டப்பட்ட பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்ற நிதர்சனத்தையும் உணர மறுத்த எதிர்க்கட்சிகள். இன்று ஒவ்வொன்றையும் நேரடியாக பார்த்து பார்த்து கட்டிய பிரதமர் மோடி அதை திறந்து வைக்க கூடாது, ஜனாதிபதிதான் திறக்கவேண்டும் இதுதான் மரபு, இது ஜனாதிபதியை, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவே நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று ராகுல் காந்தியின் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை கட்டுகின்றனர், இதில் திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளும் அடக்கம்.

அதாவது மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் மனோபாவம் தான் இது. 1975 இல் பாராளுமன்றத்தில் ஒரு புதிய கட்டிடம் இந்திரா காந்தியாலும், 1987இல் பாராளுமன்ற நூலகம் ராஜூவ் காந்தியாழும் திறக்க பட்டது என்பது சரி என்றால்.

தமிழகத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தை ஆளுநரை விடுத்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்ததும், வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கும் சோனியா காந்தி சத்தீஸ்கர் சட்டமன்றத்தை திறந்து வைத்ததும், சமீபத்தில் தெலுங்கானா மாநில சட்டமன்ற புதிய கட்டிடத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசையை விடுத்து மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் திறந்து வைத்ததும் மரபு என்றால். மோடி என்று வரும்போது மட்டும் எதிரிப்பு தெரிவிப்பது ஏன் .

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசி முடித்த பின்னும் மரபுகளை மீறி தமிழக முதல்வர் பேசியாதும், அவையிலிருந்து ஆளுநர் வெளியேறும் விதமாக நடந்து கொண்டதும், ஆட்சியில் இருப்பவர்கள் அவரை ஒருமையில் பேசியதும் எத்தகைய மரபு.

பாராளுமன்ற துவக்க நிகழ்ச்சிகளை எத்தனை அரசியல் கட்சிகள் வேண்டுமானாலும் புறக்கணித்துவிட்டு செல்லட்டும், குறைகூறி நிற்கட்டும். ஆனால் மூச்சுக்கு மூச்சு தமிழர் நலன் பேசும் திமுக புறக்கணிப்ப்பது அபத்தமான ஒன்று.

ஏனென்றால் 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சோழர் காலத்தைய பேரரசர்கள் செங்கோல் ஏந்தி நீதி தவறாமல் ஆட்சி செய்த பண்பாட்டை தொடர்ந்திடும் விதமாக, தங்கத்திலான செங்கோல் திருவாடுதுறை அதினத்தால் புனித நீர் தெளித்து நேருவிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது உத்திர பிரதேசத்தில் ஏதோ ஒரு அருங்காட்சியத்தில் உறங்கி கொண்டிருந்தக அந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்பட இருக்கிறது.

செம்மை என்ற தமிழ் சொற்றொடருடன் அலங்கரிக்க இருக்கும் இது தமிழுக்கு, தமிழகத்துக்கு கிடைத்த பெருமையல்லவா?. தமிழின் பெருமையை நிலைநாட்ட ஹிந்தி எழுத்துக்களை தேடி சென்று கருப்பு தாரடிக்கும் திமுக. இந்நேரம் இதை வரவேற்றிருக்க வேண்டாமா?. கருப்பு சிவப்பை விடுத்தது கவி கொடி ஏந்தி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றிருந்தாலும் அது தகும் .

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...