இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது

இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது
நமது ராணுவ வீரர்களுக்கு வலிமை இருந்த போதிலும், முன்பெல்லாம் தங்களது வீரதீரத்தை அவர்களால் காட்ட இயலவில்லை. தற்போது, எல்லைக்கு 250 கிமீ. தூரத்தில் உள்ள பகுதிக்குள் நுழைந்து இந்தியவீரர்கள் துல்லியத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நமது தைரியமிக்க வீரர்களின் வலிமையை பாகிஸ்தான் உணர்ந்துகொண்டுள்ளது.


இந்தத் தாக்குதலுக்குப் பிறகு எல்லைக்கு அப்பால் (பாகிஸ்தான்) அதிர்வலைகள் ஏற்பட்டன. அதன்தாக்கம் இன்னும் தணியவில்லை. பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகளை பயங்கரவாதிகள் கொன்று குவித்த போது 125 கோடி இந்தியர்களின் கண்களும் கலங்கின. பாகிஸ்தானியர்களின் அந்தவலியை ஒவ்வோர் இந்தியரும் உணர்ந்தார்.எந்த நாட்டுக்கு எதிராகவும் போராடுவதை காட்டிலும், கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள், தங்கள் ஆட்சியாளர்களைக் கோரவேண்டும். இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதோடு அப்பாவிகளையும் கொல்கிறது.


ஏழ்மையில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்று பாகிஸ்தான் மக்களும் விரும்புகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக இத்தகைய சூழல் அந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. பாகிஸ்தானுக்கு நதி நீரைத்தடுப்போம்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நதிநீரைப் பகிர்ந்து கொள்வதற்காக சிந்து நதிநீர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில் தொடர்புடைய சட்லஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகள் இந்தியாவுக்கும் நமது விவசாயிகளுக்கும் சொந்தமானவை. இந்த நதிநீரை நாம் பாகிஸ்தானுக்கு அளித்தாலும் அங்கு அவை விவசாய நிலங்களில் பயன்படுத்தப் படுவதில்லை. பாகிஸ்தான் வழியாக அவை வீணாகக்கடலில் சென்று சேர்கின்றன.
இனி இந்தநதிநீரின் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் நிறுத்தப்படும். அந்தநீரானது பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கும், பிற மாநில இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்படும். இந்த விஷயத்தில் நான் உறுதிபூண்டுள்ளேன்.


சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி நதிகளில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டுநீரும் பஞ்சாபையும், ஜம்மு-காஷ்மீரையும் சென்றடைவதை உறுதிப்படுத்த நிபுணர்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நம் நாட்டு நதிகளின் நீரானது பாகிஸ்தானுக்கு பாய்ந்தோடி வந்துள்ளது. இந்தவிவகாரத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள் தூக்கத்தில் இருந்தன. நமது விவசாயியோ நீர்த்தேவைக்காக அழுது கொண்டிருந்தார்.
பஞ்சாப் விவசாயிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்தால் அவர்களமண்ணில் இருந்து பொன்னை விளைவிப்பார்கள். நாட்டின் கருவூலத்தையும் நிரப்புவார்கள். விவசாயிகள் தங்கள் உரிமைகளை பெறுவதிலும், அவர்களின் கவலைகள் தீர்க்கப்படுவதிலும் பஞ்சாபில் உள்ள பாதல் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது


ஊழல் மற்றும் கருப்புப் பணத்தால்தான் நடுத்தரவர்க்கத்தினர் சுரண்டப்படுவதோடு, ஏழை மக்களும் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர். இதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். ரூபாய்நோட்டு வாபஸ் நடவடிக்கையானது, ஏழை மக்களுக்கு உரிமைகளை அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது புதிய நோட்டுகள் படிப்படியாக மக்களைச் சென்றடையும். ரூபாய் நோட்டுகள் மீதான தடை நடவடிக்கையால் பிரச்னைகளையும் அசௌகரியங்களையும் சந்தித்தமக்களுக்கு நன்றி கூற எனக்கு வார்த்தைகள் தோன்றவில்லை.


கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மக்கள் நவீனதொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை விட நான்குமடங்கு அதிக எண்ணிக்கையில் செல்லிடப்பேசிகள் உள்ளன. எனவே மக்கள் தங்கள் செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்கும் பணத்தைச் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகள் வழங்கும் "செல்லிடப்பேசி செயலி'களை மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் .

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ரூ.925 கோடி மதிப்பில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. சுமார் 177 ஏக்கரில் கட்டப்பட்ட உள்ள இந்த மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி பேசியது:

 

3 responses to “இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது”

  1. நான் ஏன் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?:

    கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பொம்மனாட்டிகளெல்லாம் “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.

    நான் நேராக கண்ணனிடம் சென்றேன். “கண்ணா நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. வந்து தருமயுத்தம் செய்” என்றேன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. “உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ” என்றான்.

    “என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பொம்மனாட்டிகளோடு கூத்தடிக்கிறான். எனக்கெதிராக நால்வர்ண தருமத்தை படைத்த இவன், எனக்காக தருமயுத்தம் செய்வானா?. இவனெல்லாம் ஒரு கடவுளா?. அடச்சே” என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.

    அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி “சகோதரா உள்ளே வா” என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக, நாங்கள் கோயிலுக்கு போனால் “உள்ளே வராதே, வெளியே நில், நீ தீண்டத்தகாதவன்” என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.

    அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் “என்ன விஷயம்?” என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே “இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது” என்றார்.

    “என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான். சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?” என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து “இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்” என்றார்.

    திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரைத்தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் “நந்தலாலா, நந்தலாலா, புடவையைக் கொடு நந்தலாலா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்” என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.

    நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

    “நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
    நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
    அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
    அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
    அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
    என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.

    • Admin says:

      காண்ணன் சாமிய பாக்கபோன உங்கள யாரும் தடுக்கல?, அல்லா சாமிய பாக்க போன உங்கள இமாம் தடுத்துட்டார்?. பெண்கள் அதிகம் விரும்பும் கடவுள் கிருஷ்ணன் அவன் பொருக்கியல்ல, மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போனை படித்து விட்டுதான் இன்று தீவிரவாதிகளாக பல லட்சம் பேர் உலகை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் .

  2. அம்பேத்கரை முழுங்கிய பார்ப்பனீய பௌத்தம்:

    வாழ்நாள் முழுதும் பார்ப்பனரை எதிர்த்த அம்பேத்கரே சவீதா எனும் ப்ராமின் டாக்டரைத்தான் இரண்டாவது மணைவியாக மணந்தார். ஒரு விதத்தில், அம்பேத்கர் பார்ப்பனரின் மாயவலையில் வீழ்ந்து விட்டாரென்பதை மறுக்கமுடியாது. அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவாமல் பௌத்தத்தை தழுவியமைக்கு முதல் காரணம் பாக்கிஸ்தான். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும் என பயந்தார்.

    சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.

    “நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. அம்பேத்கரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது.

    இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பது கண்கூடு.
    ———————–

    இது தவிர, “ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராமின் பனியா ஆதிக்க கூட்டம் அம்பேத்கருக்கு கொடுத்தது. ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.

    வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.

    பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

    இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். 130 கோடி மக்களுக்கு வறுமை ஒழிந்து அமைதி மலரும். அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...