தில்லியில் பாஜக தேசியசெயற்குழு வரும் 6-ஆம் தேதி கூடுகிறது

தில்லியில் பாஜக தேசியசெயற்குழு வரும் 6-ஆம் தேதி கூடுகிறது. இதில் கருப்புப்பணம் விவகாரம் உள்பட 2 விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.


இது குறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: புதுதில்லி மாநகராட்சி கவுன்சில் கூட்டஅரங்கில், பாஜக தேசிய செயற் குழு கூட்டம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகிறது. கூட்டத்தை பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தொடங்கிவைத்து பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி சனிக் கிழமை நிறைவுரையாற்றுகிறார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.


கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. முதலாவது தீர்மானம், குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், சண்டீகர் மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்தவெற்றியை பாராட்டி நிறைவேற்றப்பட இருக்கிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக 2-ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்று பாஜக நிர்வாகி தெரிவித்தார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...