இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும்

விவசாயிகள், ஏழைகள், தலித்மக்கள், வேளாண்மை, கிராமங்கள் ஆகியவற்றை மனதில்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்' என பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்தியபட்ஜெட் குறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த பட்ஜெட் எதிர்காலத்துக்கான பட்ஜெட். விவசாயிகள், ஏழை எளியமக்களின் நலன், வெளிப்படைதன்மை, ஊரக வளர்ச்சி, நகரங்கள் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. மிகவும் நல்ல பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும்.

கிராமங்களில் நிலவும் பொருளாதார சூழ்நிலை களில் இந்த பட்ஜெட் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நடுத்தர மக்களின் வருவாயை உயர்த்தும். ரயில்வேதுறையை நவீனப்படுத்துவது முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, கல்வி துறை முதல் சுகாதாரத்துறை வரை, தொழில்முனைவோர் முதல் தொழிற்சாலைகள் வரை என அனைத்து தரப்பு கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் தெளிவான முறையில் இந்தபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் இந்தபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை சாதனைக்குரியது. கறுப்புப்பணம் மற்றும் ஊழலை அடியோடு வேரறுக்கும் வகையிலான அம்சங்கள் இந்தபட்ஜெடில் வலுவாக எதிரொலிக்கிறது. வரிஏய்ப்புகளை குறைத்து, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தி டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான விரிவான திட்டங்கள் இந்த் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

தனிநபர் வருமான வரி 5 சதவீதம் குறைக்கப் பட்டதன் மூலம் குறைவான ஊதியம்பெறும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பயன் பெறுவர். ஊழல் மிகுந்த அரசியலை தூய்மைப்படுத்தும் வகையில் இந்தபட்ஜெட்டில் முக்கியமான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வந்துசேரும் நன்கொடை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுபட்ஜெட்டுடன், ரயில்வேபட்ஜெட்டும் இணைக்கப்பட்டதன் மூலம், ரயில்வே துறையின் வளர்ச்சி அதிகரிக்கும்" என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...