சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இருமாநிலங்களிலும் பா.ஜ.க அபாரவெற்றி பெற்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சிறிய கட்சிகள் ஆதரவுடன் கூட்டணிஆட்சி அமைத்துள்ளது.
பா.ஜ.க.வின் இந்தவெற்றிக்கு பிரதமர் மோடியின் பிரச்சாரமே முக்கியகாரணம் . இந்நிலையில், நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள் ளதற்கு பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பிரதமர் மோடியை தொலை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மேலும், அபுதாபி இளவரசர் ஷேக்முகம்மது பின் ஷயாத் அல் நஹ்யான், கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் பல்வேறு வெளிநாட்டுதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.