மம்தா பானர்ஜியை தேசியளவில் ‘கார்னர்’ செய்யும் பாஜக

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய இந்தவன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த வன்முறைச் சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல்வன்முறை சம்பவத்தை வைத்து மம்தாவை தேசிய அளவில் ‘கார்னர்’ செய்ய மத்திய பாஜக திட்டமிட்டுள்ளதாக ‘டெக்கான் ஹெரால்டு’ வெளியிட்டசெய்தி ஒன்று தெரிவிக்கிறது. மேற்குவங்க பாஜக தலைவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியில், ‘தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக பிற மாநிலங்களின் கட்சித் தலைவர்களை சந்தித்து மம்தாவுக்கு எதிராக குரல்கொடுக்க வலியுறுத்தவேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை, மாநிலப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பிரசாரம் செய்து மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையை எடுத்துக்காட்டுவதன் மூலம் தேசிய அளவில் திரிணாமூல்கட்சி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களிடம் எதிர்மறை இமேஜே ஏற்படுத்துவதே இதன்நோக்கம்.

மேற்கு வங்கத்தில் தற்போது இருக்கும் லாக்டவுன் போன்ற நிலைமை காரணமாக வன்முறை தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலையில் மாநில பாஜக உள்ளன. எனவேதான் பாஜக தலைமை தேசியளவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு வன்முறையை எடுத்துரைத்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் மம்தா பானர்ஜியை தேசியளவில் ‘கார்னர்’ செய்வதும் இந்தமுயற்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும். இதனைசெய்ய திலீப் கோஷ், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி, கைலாஷ் விஜயவர்ஜியா, பூபேந்திர யாதவ் போன்ற மாநில தலைவர்களுக்கு பாஜக மத்திய தலைமை அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த அழுத்தத்தின் காரணமாக இதுவரை மாநில பாஜக தலைமை 13 மாநிலங்களின் கட்சித் தலைவர்களுடனும் ஒருயூனியன் பிரதேச தலைவர்களுடனும் சந்திப்புகளை நடத்தி வன்முறையின் தாக்கத்தை எடுத்துரைத்துள்ளது. மாநில பாஜக தலைவர் திலீப்கோஷ் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக தலைவர்களுடன் நேரடி சந்திப்புகளையும், குஜராத் மற்றும் மேகாலயாவில் உள்ள கட்சித்தலைவர்களுடன் தொலைபேசி உரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அவரைப்போலவே கைலாஷ் விஜயவர்ஜியா பீகார், பஞ்சாப், உத்திரகண்ட் மற்றும் யாதவ் ஆகிய இடங்களில் கட்சித் தலைவர்களுடன் சந்திப்புகளையும், பூபேந்திரயாதவ் அசாம் மற்றும் நாகாலாந்து மாநில கட்சித் தலைவர்களை சந்தித்தும் பேசியிருக்கின்றனர். இவர்கள் வலியுறுத்திய மற்ற மாநில தலைவர்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பாலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மம்தாவை குற்றம்சாட்டி மேற்கு வங்க பாஜக பேசியிருக்கிறது. தொடர்ந்து இந்தபிரசாரத்தை தீவிரப்படுத்த கட்சித் தலைமை அக்கறை கொண்டுள்ளது’ என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...