அஸ்வின் குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்

தமிழக காவல் துறையில் சிலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம்சாட்டினார்.

பாஜக ராமநாதபுரம் நகர பொதுச்செயலர் அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தையை தாக்கியவர்களைக் கண்டித்து, ராமநாதபுரம் அரண்மனைமுன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: அஸ்வின்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில், பொய் வழக்கு பதிந்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரின் தலையீடு இதில்இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் கூடநல்லது. இது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் கீழடி அகழ்வாராய்ச்சிக்குத் தடைசெய்வதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளது தவறானகருத்து. காவல்துறையினர் சிலை கடத்தலிலும் ஈடுபட்டுள்ளது வெளிச்சமாகியுள்ளது. இதற்கு திமுகவும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் ஆட்சியில்தான் சிலைகடத்தல் தொடங்கியுள்ளது. காவல்துறையில் சில பேர் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதும், உடந்தையாக இருப்பதும் தமிழகமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

மு.க.ஸ்டாலின் முறையான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை. நதிகளை இணைக்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸிடம் இதை திமுக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். நீட்தேர்வில், தமிழகத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...