பி.ஜே.பி ஆதரவுடன் தற்போது நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்

சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலுபிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார், நேற்று ராஜினாமா செய்தார். பா.ஜ., ஆதரவுடன் இன்று காலை மீண்டும் முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் ஊழல் புகார்காரணமாக சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், தேஜஸ்வியை நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில், 'தேஜஸ்வி துணைமுதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யமாட்டார்' என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். கருத்து வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், திடீரென பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.


இந்நிலையில், பி.ஜே.பி ஆதரவுடன் தற்போது நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். மேலும், பீகார் மாநில பி.ஜே.பி தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இருவருக்கும் ஆளுநர் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...