பி.ஜே.பி ஆதரவுடன் தற்போது நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்

சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலுபிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார், நேற்று ராஜினாமா செய்தார். பா.ஜ., ஆதரவுடன் இன்று காலை மீண்டும் முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் ஊழல் புகார்காரணமாக சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், தேஜஸ்வியை நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில், 'தேஜஸ்வி துணைமுதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யமாட்டார்' என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். கருத்து வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், திடீரென பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.


இந்நிலையில், பி.ஜே.பி ஆதரவுடன் தற்போது நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். மேலும், பீகார் மாநில பி.ஜே.பி தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இருவருக்கும் ஆளுநர் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...