ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான கிரிமிலேயரை, 6 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்ச ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியா ளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, கிரிமி லேயர் உயர்த்தப் பட்டதன் மூலம், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்வரை வருமானம் பெறுவோர் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியும் என்றார்.
மேலும் ஓபிசி பிரிவின் கீழ் வரும் அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டு பலன்களை பெறும் வகையில், ஓபிசி பிரிவில் 3 உட்பிரிவுகளை கொண்டுவருவது குறித்து, மத்திய அரசு பரீசிலித்து வருவதாகவும் அவர்குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஆராய ஆணையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அருண் ஜெட்லி மேலும் தெரிவித்தார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.