அத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்

நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத்தலைவராக நியமிப்பதாக, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ராமகாஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்கள் 14 பேரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் நியமிக்கப் பட்டுள்ளனர். மூத்தத் தலைவர் அத்வானி தலைமையிலான இக்குழு, நெறிமுறைக்குப் புறம்பாகச்செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும், அவர்கள்மீது சுமத்தப்படும் புகார்கள் குறித்தும் விசாரித்து, சபாநாயகருக்கு அறிக்கையும் சிபாரிசும்செய்யும்.

இந்தக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பாடுகளைத் தானாக முன்வந்து விசாரித்தும் அறிக்கைகள் சமர்ப்பிக்கும். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவுக்கு, நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக, தம்பிதுரை எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுநிதி திட்டத்தையும், ஆராயும் குழுத் தலைவராக சபாநாயகரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...