ஈ.வே.ரா. வின் வழி வந்த திமுக அண்ணலின் படத்தை வைத்து நிற்பது கர்மா

1952 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை வடக்கு நாடாளுமன்ற தொகுதியிலும், 1954 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் பண்டாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வேட்பாளராக போட்டியிட்ட போது கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து அவரை தோற்கடித்த காங்கிரஸூம்…

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பு சட்ட நகலை 1957 ஆம் ஆண்டு எரித்த ஈவெராவை தலைவராக ஏற்றுக்கொண்ட திமுகவும்…

இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தை ஏந்தி நாடாளுமன்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அப்பட்டமான நாடகம்..!!

திரு.ஜவகர்லால்நேரு, திருமதி.இந்திரா காந்தி, திரு.ராஜீவ்காந்தி திரு.நரசிம்மராவ், திரு.மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரதமர்கள் 54 வருட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் 84 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் கலைத்து அரசியல் சாசனத்தையும், அதை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் அவமதித்ததையும் மக்கள் அனைவரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உயிரோடு இருந்த போது அண்ணலையும், அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தையும் அவமதித்தது காங்கிரஸ். டாக்டர்.ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் காலம் முதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் இன்றைய ஆட்சி காலம் வரை அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்தையும் பெருமைபடுத்திய ஒரே தேசிய அரசியல் இயக்கம் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் என்பதே நிதர்சனம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களை தேர்தலில் சதி செய்து தோற்கடித்த காங்கிரஸூம், அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின் நகலை எரித்து அவமதித்த ஈவெராவின் வழிவந்த திமுகவும் இன்று அண்ணலின் திருவுருவ படத்தை ஏந்தி நாடாளுமன்ற வாயிலில் நிற்பது “கர்மா”.
நன்றி பாஜக மூத்த தலைவர் H.ராஜா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...