மோடிக்கு காஷ்மீரைச்சேர்ந்த குப்பை அள்ளும் இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி யில் பேசும்போது தன்னைப்பற்றிக் குறிப்பிட்டதற்காக மோடிக்கு காஷ்மீரைச்சேர்ந்த குப்பை அள்ளும் இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கி யத்துவம் பற்றியும், காஷ்மீரைச் சேர்ந்த குப்பை அள்ளும் பிலால்தர் என்ற 18 வயது இளைஞரின் சேவை பற்றியும் கூறி அந்த இளைஞருக்கு பாராட்டுதெரிவித்தார். தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்ரீநகர் நகராட்சியின் அதிகாரபூர்வ தூதராக கடந்த ஜூலைமாதம் பிலால் தர் நியமிக் கப்பட்டார்.

இதுகுறித்து மோடி பேசும்போது, ‘‘விழிப்புணர்வு பணிக்காக அதிகாரபூர்வ தூதர்களாக திரைப்படம் அல்லது விளையாட்டு துறையை சேர்ந்தவர்களை நியமிப்பது வழக்கம். தூய்மைஇந்தியா திட்டத்துடன் பல ஆண்டுகளாக தன்னைத் தொடர்புபடுத்தி கொண்டிருக்கும் பிலால்தர் தூய்மை விழிப்புணர்வு பணிக்கான தூதராக ஸ்ரீநகர் நகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய ஊலர் ஏரியில் இருந்து பிளாஸ்டிக், பாலிதீன், பாட்டில்கள், கழிவுகள், குப்பைகளை அவர் அகற்றிவருகிறார். இதன் மூலம் அவர் சம்பாதிக்கவும் செய்கிறார். அவரது பணியை பாராட்டுகிறேன்’’ என்று கூறினார்.

இதற்கு பிலால்தர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘வானொலி நிகழ்ச்சியில் என்னைப்பற்றி பிரதமர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது ஆயுள்முழுவதும் தூய்மைப் பணியிலும் மக்களுக்கு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபடுவேன்’’ என்றார்.

குப்பை அள்ளி அதில் கிடைக்கும் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்திவந்த பிலால் தரின் தந்தை 2003-ல் புற்றுநோயால் காலமானார். பின்னர், தாயையும் 2 சகோதரிகளையும் காப்பாற்ற ஸ்ரீநகர் ஏரியில் குப்பைஅள்ளும் பணியில் பிலால் ஈடுபட்டு வருகிறார். இதில் கிடைக்கும் பொருட்களை விற்பதன் மூலம் ஒருநாளைக்கு ரூ.200 வரை கிடைக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரம் கிலோ கழிவுகளை பிலால் அகற்றுவதாக கூறுகின்றனர். கடந்த ஜூலை மாதம் ஸ்ரீநகர் நகராட்சியின் தூய்மை விழிப்புணர்வுதூதராக அவர் நியமிக்கப்பட்டார். நகராட்சி சார்பில் விரைவில் அவர் மக்களை சந்தித்து தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...