பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ஆசியன் உச்சிமாநாடு நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள்பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த இருதரப்பு பேச்சு வார்த்தையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில், இரு தரப்பு வர்த்தகத்தினை ஊக்குவித் தலுக்கான வழிகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் போன்ற பிற விவகார ங்களுடன் இருநாடுகளின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய விசயங்கள் இடம்பெற்றன. பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில்வாழும் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி கூறியதாவது:-
21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என கருதப் படுகிறது; 21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவது அரசின்கடமை, அதுசாத்தியமே என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது நம்பிக்கை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் என்பதை இந்தியஅரசு நிரூபித்து காட்டியுள்ளது. இந்தியாவில் அனைத்தையும் உலகத்தரத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.