அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்; வக்பு வாரியம்

அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம் தெரிவித்து உத்தரபிரதேச ஷியாபிரிவு முஸ்லிம் வக்பு வாரியம் மற்றும் இந்து சாமியார்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமைதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தபிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண் பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் நோக்கில் உத்தர பிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் வக்புவாரியமும், இந்து அமைப்பினர் மற்றும் சாமியார்களும் இணைந்து உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். இதுதொடர்பாக 5 அம்ச பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 18-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

4 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைக்கு இந்து சாமியார்கள் மகந்த் தரம் தாஸ் (அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரர்), மகந்த் ராம்தாஸ், மகந்த் சுரேஷ் தாஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ்தாஸ் வேதாந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த பரிந்துரைகளை வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதில் முக்கியமாக அயோத்தியில் பாபர் மசூதி தேவையில்லை என்றும், அங்கு ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. பாபர் மசூதிக்கு பதிலாக லக்னோவின் உசேனாபாத்தில் மசூதிஒன்று கட்டி, அதற்கு மஸ்ஜித்-இ-அமான் என பெயரிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் பாபர்மசூதியில் தங்களுக்கு உள்ள உரிமையை வக்பு வாரியம் திரும்ப பெறுகிறது எனவும், புதிய மசூதிக்கு நிலம் ஒதுக்கித்தரும்படி மாநில அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வசீம் ரிஸ்வி கூறுகையில், ‘அயோத்தி, கோவில்கள் நிறைந்த ஒரு பகுதி. அங்கு மசூதி தேவையில்லை. ஆனால் உசேனாபாத்தில் மசூதிகட்ட முடியும். இதற்காக 1 ஏக்கர் நிலம் நிலம் ஒதுக்குமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்வோம். பின்னர் மக்களிடம் நிதிவசூலித்து மசூதி எழுப்புவோம்’ என்றார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...