2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்

2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. காலை 11 மணியளவில் வெளியான இந்தவழக்கின் தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இந்ததீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். 

இந்நிலையில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானது குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமான வர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உரிமங்களை ரத்துசெய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம்” என்று கூறியுள்ளார். முன்னதாக 2ஜி வழக்கில் மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...