சுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் சந்திப்பு

பாகிஸ்தானில் மரணதண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் ஜாதவ் பெரும்போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார். இந்தசந்திப்பிற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பெரிதும் முயற்சி எடுத்தார். இந்தநிலையில் இந்தசந்திப்பு முடிந்த பின் இன்று குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் இன்று சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். இந்தசந்திப்பிற்கு முயற்சி செய்ததற்காக ஜாதவ் குடும்பத்தினர் சுஷ்மாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

பெரும்பாதுகாப்பிற்கு மத்தியிலேயே ஜாதவ் குடும்பத்தினர் பாகிஸ் தானில் ஜாதவை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் இருந்தபோது உளவு பார்த்ததாக கைது செய்யப் பட்டார். மேலும் இந்தியரான இவர் ஈராக்கில் இருந்துவந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா இந்தசெய்தியை மறுத்தது. அவர் ஈராக்கில் வியாபாரம் செய்ததாகவும், அவரை நாடு கடத்தி விட்டதாகவும் இந்தியா கூறியது.
 
இவர் உளவு பார்த்தாககூறி அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனைவிதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்புவழங்கியது. இந்தியாவின் கடும் முயற்சிக்கு பின் சர்வதேசநீதிமன்றம் இந்த தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவுபிறப்பித்தது.
 
இதையடுத்து ஜாதவ் அவரது குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப் பட்டார். நேற்று பாகிஸ்தான் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் அவரைசந்தித்தனர். ஆனால் இவர் கண்ணாடிக்கு பின்பக்கமும், அவரது குடும்பம் கண்ணாடிக்கு அடுத்த பக்கமும் உட்கார வைக்கப்பட்டனர்.
 

இந்தசந்திப்பு நிகழ்வதற்கு இந்திய வெளியுறவுத் துறை முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் இன்று சுஷ்மாவை சந்தித்தனர். இந்தசந்திப்பை ஏற்பாடு செய்ததற்காக சுஷ்மாவிற்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...