இந்திய கடற்படை வீரர்களுக்கான மரண தண்டனை, சிறைதண்டனையாகக் குறைப்பு

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்தியகடற்படை வீரர்களுக்கான மரண தண்டனையானது, சிறைதண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தவழக்கில் மத்திய அரசு தலையிட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், கத்தாருக்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் சென்றனர்.

தூக்கு தண்டனையானது சிறைதண்டனையாகக் குறைக்கப்படுவதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழுமையான தீர்ப்புநகலுக்காக காத்திருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக சட்டநிபுணர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் கத்தாருக்கான இந்தியதூதர் மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர். இந்தவிவகாரத்தின் தொடக்கம் முதல் நாங்கள்(இந்திய அரசு) அவர்களுக்கு (குடும்பத்தினருக்கு) ஆதரவாக நிற்கிறோம். தொடர்ந்து தூதரக மற்றும் சட்டஆதரவை வாங்கள் வழங்குவோம். அதோடு, இந்த விவகாரத்தை கத்தார் அரசுக்கும் கொண்டு செல்வோம்.

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான COP28 மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்த இந்த பேச்சுவார்த்தை மிகவும் நல்ல முறையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...