பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது

பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.


 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற பாஜக ரயில்வே தொழிற்சங்க கூட்டத்தில், இது குறித்து அவர் பேசியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் கோழைத் தனமான முறையில் தாக்குதல் நடத்தி, நமது வீரர்கள் 17 பேரைக்கொன்றது. இது குறித்து எங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கர வாதிகளை இந்திய ராணுவம் கொன்றது.


 இதன்மூலம், எதிரிகள் மீது நமது மண்ணில் மட்டுமல்லாமல், அவர்களது நாட்டுக்குள் சென்றும் தாக்குதல் நடத்தமுடியும் என்ற உறுதியான செய்தியை உலகுக்கு இந்தியா தனது துல்லியத்தாக்குதல் மூலம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்தியா சக்திவாய்ந்த நாடு என்ற தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா தனதுசக்தியை மேலும் அதிகரித்துள்ளது.
 பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் தனதுபோக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியா ஒரு போதும் பிற நாடுகளிடம் மண்டியிடாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்.


 பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இதை சர்வதேச பொருளாதார ஆய்வறிஞர்களும், நிபுணர்களும் ஒப்பு கொண்டுள்ளனர் என்றார் ராஜ்நாத்சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...