எத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவு

பெட்ரோலில் கலப்பதற்கு எத்தனால் வாங்கு வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்தார். வாகன பெருக்கத்தால் பெட்ரோல், டீசல்பயன்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் இதற்கு தேவையான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. இதற்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும்வகையில், எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனைசெய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை 2016 அக்டோபரில் ஒப்புதல் அளித்தது. எத்தனால் கலப்பதால் கரும்பு விவசாயிகளுக்கும் பலன்கிடைக்கும். எத்தனால் வாங்கும் நடைமுறையை மத்திய அரசு எளிமைப்படுத்த இருக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், லக்னோவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:  எத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலப்பதால், கச்சா எண்ணெய் இறக்குமதிதேவை குறையும். அதோடு, கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலைகிடைக்கும். பெட்ரோலில் 10 சதவீதம்வரை எத்தனால் கலப்பது அனுமதிக்கப் பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில்  எத்தனால் பயன் பாடுகள் அதிகரிக்கும். கரும்பு விவசாயிகள் பெரியளவில் பலன்பெறுவார்கள். கச்சா எண்ணெயை போலவே எத்தனால் பெட்ரோல், டீசல் தயாரிப்புக்கான மூலப்பொருளாக கருதப்படும் என்றார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எத்தனால் உற்பத்தி திட்டத்துக்காக 50 ஏக்கர்நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில்தொடங்கும் என பிரதான் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...