வாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்

வாஜ்பாயின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று என்றால், அது கண்டிப்பாக தங்க நாற்கர சாலையாக தான் இருக்கும். இந்த சாலைதான் தற்போது இந்திய தேசியபோக்குவரத்திற்கு அடித்தளமாக உள்ளது. சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் இந்தசாலை தற்போது சிறு சிறு நகரங்களுக்கும் நீண்டு செல்ல இவர் தான் காரணம்.

அரசு நிறுவனங்கள் சிலவற்றை தனியார் மயமாக்கி, தனியார் மயத்திற்கு வித்திட்டது இவர்தான். ஆம், அப்போது மூழ்கும் நிலையில் இருந்த சில அரசு நிறுவனங்களை, தனியாருக்கு கொடுத்து, அதைகாப்பாற்றியது இவர்தான். ஹிந்துஸ்தான் சின்க், பாரத் அலுமினியம் கம்பெனி, இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு அளித்தார்.

இவருடைய ஐந்து ஆண்டு ஆட்சியில் தான் இந்தியாவின் ஜிடிபி மிகவும் நிலையாக இருந்தது. அதேபோல் இவருடைய ஆட்சியில் சராசரியாக இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துகொண்டே சென்றது. அதேபோல் 1998ல் இருந்து அடுத்த ஐந்து வருடம் இந்தியாவின் நிதியாண்டு அறிக்கை மிகவும் நிலையாக இருந்தது.

இவரது ஆட்சியில்தான் தொலைத்தொடர்பு துறை அசாத்திய மாற்றத்தை கண்டது. கட்டண முறைகளை மாற்றி ஏல முறைகளை அறிமுக படுத்தினார். அதேபோல், பிஎஸ்என்எல் இவரால்தான் பெரிய வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் 2ஜி நெட்வொர்க் எப்படி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் இவர் டெலிகாம் துறையில் கொண்டுவந்த சட்டங்கள் பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது.

சர்வசிக்ச அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி என்று இவர் கொண்டுவந்த திட்டம்தான் இந்தியாவில் கல்வியில் பெரியபுரட்சியை கொண்டு வந்தது. கல்வி செல்லாத வடமாநில கிராமங்களில், கல்வியை கொண்டுசெல்ல இந்த திட்டம் உதவியது. இந்த திட்டம் வந்த 4 ஆண்டுகளில் பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களில் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.